மும்பை: கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மும்பையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், தண்டவாளத்திலும் தண்ணீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.