குப்வாரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் டெராகாம் என்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இதேபோன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த தாக்குதல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.