சென்னை: மக்கள் மய்யம் தொண்டர்களின் அடையாளமாக அவர்களின் செயல்பாடுகள் நேர்மையுடன் இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தனர்.
அவர்களை உற்சாகமாக வரவேற்ற கமல்ஹாசன், தொண்டர்கள் நேர்மையுடன் மக்களுக்கு செயலாற்ற வேண்டும் என்றும், அடையாளமாக அவர்களின் நேர்மையான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.