காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தில்லியில் மத்திய நீர்வள மேம்பாட்டுத் துறை சார்பாக நாளை (மார்ச் 9) ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரும் கர்நாடக மாநிலத்துக்கு 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது. அதேசமயம் கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்ற அளவில் மாற்றமும் செய்யவில்லை.
அதேசமயம் இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதால், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் ஆலோசனை நடத்த தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து நாளை (மார்ச் 9) ஆலோசனை கூட்டம் நடக்க உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, பொதுத் துறை மற்றும் முதல்வர் அலுவலக செயலாளர் செந்தில் குமார், போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.