ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலையில் அனந்தநாக்கின் ஹகுராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களுக்கு எந்தவித சேதமும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.