நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை 

நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 100 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை

நாமக்கல்: நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 100 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் வசித்து வருவர் தொழிலதிபர் திருநாவுக்கரசு என்பவர் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும்  ரூ.20 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்து திருநாவுக்கரது அளித்த புகாரின் பேரில் சம்ப இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடவியல் துறை நிபுணர்கள் மர்ம நபர்கள் குறித்த தடயங்களை சேகரித்து வருகின்றன. 

தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com