2020-ல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தை எட்டுவார்களாம்..! 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் உயர்க்கல்வி மற்றும் கூட்டு ஆராய்ச்சி
2020-ல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தை எட்டுவார்களாம்..! 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் உயர்க்கல்வி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், தேசிய மற்றும் பன்னாட்டு மாநாடுகளை இணைந்து நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பல்கலைக்கழகங்களிலும் உள்ள ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் தங்கள் வசதிக்காக 2 பல்கலைக்கழகங்களின் நூலகங்களைப் பயன்படுத்துவதற்கும், ஆராய்ச்சிக்களுக்காக ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கும், கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், அவர்களின் ஆராய்ச்சி மேம்படும் வகையில் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை இணைந்து நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும். மேலும் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தவும், குறுகிய கால கல்வித்திட்டங்களை இணைந்து மேற்கொள்ளவும் துணைபுரியும்.

இத்துடன் மேலும் 2 ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டுள்ளன. அதில் மதுரை செல்லமுத்து மனநலம் மற்றும் புனர்வாழ்வு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அழகப்பா பல்கலைக்கழகத்திலும் மற்றும் அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் மாணவர் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டு கல்லூரி ஆசிரியர்களுக்கு மனநலம் பற்றிய பயிற்சியளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மனநலம் பற்றிய ஆலோசனைகள் வழங்குவர். 

மற்றொரு நிறுவனமான காரைக்குடி அருகேயுள்ள விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் வேளாண்மை சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகப் பயன்பாட்டில் இல்லாத நிலங்களை இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகவும், இயற்கை வனப்புடைய நிலமாக மாற்ற விவசாயக் கல்லூரிப் பேராசிரியர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கிறது. 

பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தோட்டங்களை உருவாக்கவும், நெல் சாகுபடி செய்யவும், இயற்கை விவசாயம் செய்வதற்கும் மற்றும் வேளாண்காடுகள் வளர்ப்பதற்கும் இந்த ஒப்பந்தம் துணைபுரியும் என்றார் துணைவேந்தர் சொ.சுப்பையா.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து செல்லமுத்து அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராமசுப்பிரமணியன்  பேசுகையில்,  மிழக பல்கலைக்கழகங்களில் முதன் முறையாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்பட இருக்கிறது.  "2020-ம் ஆண்டுக்குள், இந்தியா முழுவதும் 67 லட்சம் பேர் மனநலம் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதில், 3.8 சதவிகிதம் பேர் குழந்தைகளாக இருப்பார்கள். இதற்கான காரணம், மன அழுத்தம், மன நலம் பாதிக்கக்கூடிய ஆணிவேராக இருக்கிறது. மேலும் தற்போது வளர்ந்திருக்கும் புதிய டெக்னாலஜியான இணைதளம் மொபைல் போன்கள், அதில் நல்லதை விட தீங்கை விளைவிக்கக் கூடிய விளையாட்டு வீடியோ கேம் மற்றும் சிலர் வீடியோ கேம்களில் ஆரோக்கியமற்ற உறவு, வேலைகளில் இருக்கும் அழுத்தம், பாலியல் தொந்தரவு போன்றவைகள் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க இந்தியா முழுவதும் 6 ஆயிரம் மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகங்கள் 46 மட்டுமே இயங்கிவருகின்றன. 

தற்போது மனநலம் குறித்து விழிப்புணர்வு குறித்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் இதற்கான பயிற்சிப் படிப்புகளைக் கற்பிக்கவேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம். பெற்றோர்கள், பிள்ளைகளைத் துன்புறுத்தக் கூடாது. தொடர்ந்து படிக்கவைப்பதும், நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களை வலுகட்டாயமாக படிக்க வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு மனஅழுத்தம் கொடுக்காமல், சுதந்திரமாக கற்க வைக்க வேண்டும். 

இந்தியாவிலேயே முதல் பல்கலைக்கழகமாக, அழகப்பா பல்கலைக்கழகத்தில்தான் மனநலம்குறித்து தனிப்பாடமாகக் கொண்டு வர இருக்கிறோம். அழகப்பா பல்கலைக்கழத்திலும் மற்றும் அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் மாணவர் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று ராமசுப்பிரமணியன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com