பிரதமரின் பயணத்திட்டத்தை சமூகவலைதளத்தில் முன்னரே வெளியிட்ட நபர் கைது

பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்னர் தனது சொந்தத் தொகுதியான வாராணசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பிரதமரின் பயணத்திட்டத்தை சமூகவலைதளத்தில் முன்னரே வெளியிட்ட நபர் கைது

லக்னோ::   பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்னர் தனது சொந்தத் தொகுதியான வாராணசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அனுப் பாண்டே என்ற நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் நிமிடத்திற்கு நிமிடம் மோடி என்ன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பதை முன்னரே பதிவிட்டுள்ளார்.

பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படை உத்தரப்பிரதேச போலீசாரிடம் இது குறித்து புகாரளித்தது. இதனை அடுத்து, அனுப் பாண்டே கைது செய்யப்பட்டார். பிரதமரின் பயணத்திட்டத்தை முன்னரே சமூக வலைதளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதாகியுள்ள அனுப் பாண்டே பிரதமர் மோடியின் சமூக வளைதளங்களை கையாளும் குழுவில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பணியாற்றியுள்ளார். இவரது ட்விட்டர் கணக்கை மோடியே பின் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com