உலக வர்த்தக அமைப்பின் இரண்டு நாள் மாநாடு தில்லியில் இன்று தொடங்கியது. 7 நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள், 50 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபெர்டோ அஸீவேடோ, இந்திய வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட 7 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் பங்கேற்றனர். ஆப்ரிக்க நாடுகள் உள்பட 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வணிக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபெர்டோ அஸீவேடோ பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.