அமெரிக்காவில் மேரிலாண்ட் உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சூடு 

அமெரிக்காவில் மேரிலாண்ட் உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில்
அமெரிக்காவில் மேரிலாண்ட் உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சூடு 

அமெரிக்காவில் மேரிலாண்ட் உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் இருந்து சாலை வழியே சுமார் 90 நிமிட பயண தூரத்தில் மெரிலான்ட் மாநிலம் அமைந்துள்ளது,

இம்மாநிலத்துக்கு உடபட்ட செயின்ட் மேரிஸ் கவுன்ட்டியில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்பது தொடர்பான விபரம் வெளியிடப்படாத நிலையில் அங்கு இருந்த புலனாயுவுத்துறை போலீசார் எதிர்தாக்குதல் நடத்தியதாகவும், சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் பள்ளிகளில் 16 முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com