சென்னை: சென்னையை அடுத்த ஆவடி, திருவெற்றியூர் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத சுமார் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவடி அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆய்வுகுழு தலைவர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 8 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது, உரிய கணக்கில் இல்லாத ரூ.85 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, திருவெற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரங்கிமலை லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அபேபாது வெளியே செல்ல முயன்ற சார் பதிவாளர் தாமோதரனிடம் கணக்கில் வராத ரூ.1,100 ரூபாய் மற்றும் முக்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.