காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் 
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட ஹல்மத்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

மாலை 3.30 மணியளவில் ரோந்துப் படையினர் ஆராம்போரா பகுதியை நெருங்கியபோது அவர்களை இடைமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர். சில மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. 

துப்பாக்கிச்சூடு நடைபெற்றுவருவதால் அந்த பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com