நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு வரும் ஏப்ரல் 7 முதல் ஜூன் 30 வரை சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த சிறப்பு ரயில் சனிக்கிழமை மாலை 5.30க்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை 11.15க்கு ஜபல்பூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.