விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை எதிர்த்து சென்னையில் போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.எ.க்கள் உள்பட 690 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
ராமர் கோயில் கட்டுவது, ராமாயணத்தைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, ராம ராஜ்ஜியம் உருவாக்குவவது ஆகியவற்றை வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழகம் வந்தது.
செங்கோட்டை வழியாக ராமேசுவரம் செல்லும் இந்த ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை கைது செய்தது எதிர்த்து போராட்டம் நடத்திய 3,314 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டதாக சென்னை மாநகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.