அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள செயின்ட் மேரி நகரில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள செயின்ட் மேரி நகரில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில், பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

1500 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சத்தம் பேட்டு வகுப்பில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வளைத்துப்பிடித்தனர். உடனடியாக பள்ளி மூடிப்பட்டது. மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.  

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் அங்கு வந்து குவிந்தனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. 
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் உயிர்சேதங்கள் குறித்தோ, காயமடைந்தவர்கள் குறித்தோ எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 17 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com