சென்னையில் பொன் விழா ஏற்பாடு செய்யப்படும்: ஓ.பன்னீர் செல்வம்

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு சென்னையில் பெரிய அளவில் விழா ஏற்பாடு
சென்னையில் பொன் விழா ஏற்பாடு செய்யப்படும்: ஓ.பன்னீர் செல்வம்

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு சென்னையில் பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்படும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

1969-ல் ஜனவரியில் தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நிகழ்வு நடந்து 50 ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு என அரசு சார்பில் கொண்டாடப்படும் என முன்னதாக முதல்வர் பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

1967-ஆம் ஆண்டு அப்போதையசென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969-ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு பொன் விழா ஆண்டாக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது. 

தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும்,அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் அனைவரும் சிறப்பிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்தது. 

இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்  இன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு சென்னையில் பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார் மேலும் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com