தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பணி காலியாக இருந்தது. ஏற்கெனவே இருந்த துணைவேந்தர் ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தம்ம சூரிய நாராயண சாஸ்திரியை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். தம்ம சூரியநாராயண சாஸ்திரி புனே சாவித்ரிபாய் புலே பல்கலை. சட்டப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
அம்பேத்கர் பல்கலைக்கழகத்திலும் துறைத் தலைவராக பணியாற்றியவர். இவர் தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலை. துணைவேந்தராக 3 ஆண்டு பதவி வகிப்பார்.