புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரியில் முதுநிலை, பல்மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவம் மற்றும் மருத்துவப் படிப்புக்கு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வின் மூலம் தகுதி பெற்ற மாணவர்கள் வியாழக்கிழமை (மார்ச் 8) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 வியாழக்கிழமை முதல் நிர்வாக இடஒதுக்கீடு, என்.ஆர்.ஐ (வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடம்) உள்ளிட்ட இடங்களுக்கு மார்ச் 21-ஆம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 
தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
‌w‌w‌w.​c‌e‌n‌t​a​c‌o‌n‌l‌i‌n‌e.‌i‌n என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவித்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.centaconline.in என்ற இணையதளம் மூலம் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com