சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் ம.நடராஜன் (74) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
அவரது உடல் பெசன்ட் நகர் இல்லத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நடராஜன் உடலுக்கு திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடராஜனின் உடல் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடராஜனின் உடல் முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுச்சின்னம் எதிரே உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.