ஸ்ரீ தேவிகருமாரி அம்மன் கோவிலை 8 அடிக்கு உயர்த்திய கட்டிடக்கலை நிபுணர்கள்

திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகரில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஸ்ரீ தேவிகருமாரி அம்மன் கோவில், அடுத்தடுத்து தார்ச்சாலைகள் போடப் பட்டதால், பள்ளமாகிப் போனது.
ஸ்ரீ தேவிகருமாரி அம்மன் கோவிலை 8 அடிக்கு உயர்த்திய கட்டிடக்கலை நிபுணர்கள்

சென்னை: திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகரில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஸ்ரீ தேவிகருமாரி அம்மன் கோவில், அடுத்தடுத்து போடப்பட்ட தார்ச்சாலைகளால் பள்ளமாகிப் போனது. இதனால் கோயிலுக்குள் மழைநீர் அடிக்கடி நுழைந்து சிரமம் ஏற்பட்டது.

இதனைதடுக்க, கோயிலை உயர்த்தி நிலைநிறுத்த, ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மாநில கட்டிடக்கலை நிபுணர்கள், 70-க்கும் அதிகமான ஜாக்கிகளைக் கொண்டு, கோயில் கட்டிடத்தை 8 அடிக்கு உயர்த்தியுள்ளனர். இப்பணிகள் நிறைவடைந்ததும், குடமுழுக்கு நடத்த திட்டமிட்டிருப்பதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com