ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

பண்ணாரி அம்மன் அக்னி குண்டம் திருவிழாவை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி,

ஈரோடு: பண்ணாரி அம்மன் அக்னி குண்டம் திருவிழாவை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பண்ணாரி அம்மன் அக்னி குண்டம் திருவிழாவை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் கல்லூரிகளில் ஏற்கெனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி நடைபெறும். அதேபோல் வங்கிகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 21-ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com