பிளஸ் 1 கணித தேர்வு சரியாக எழுதாத மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் பிளஸ் 1 கணிதத் தேர்வை சரியாக எழுதாத மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்
பிளஸ் 1 கணித தேர்வு சரியாக எழுதாத மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் பிளஸ் 1 கணிதத் தேர்வை சரியாக எழுதாத மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 1-ஆம் வகுக்கு கணிதத் தேர்வு வரை நடந்து முடிந்துள்ளது. கணித தேர்வு அன்று தேர்வு அறையில் மாணவ - மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டது. வினாத்தாளை வாங்கிபார்த்ததும் மாணவ-மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில், கொடுக்கப்பட்டிருந்த வினாக்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. மாறாக, புத்தக்கத்திற்கு உள்ளேயும், சம்பந்தமில்லாத வகையிலும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும்  கணித தேர்வை சிரமப்பட்டு எழுதியுள்ளனர் .

தேர்வு அறையிலிருந்து அழுதுக்கொண்டே வெளியே வந்த மாணவிகள் பலர், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? என்பதே சந்தேகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சர்மிளா என்ற பிளஸ் 1 மாணவி, கணிதத் தேர்வை சரியாக எழுதாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னபே, ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற மாணவிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. 90க்கு 90 மதிப்பெண்கள் எடுப்பதில் தான் சிக்கல் இருக்குமே தவிர, வெற்றி பெறுவது என்பது எளிதான ஒன்று தான் என்று தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com