இந்தூர்: மத்தியப்பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் இன்று வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த பஸ் மோதியதில் பஸ் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், தார் மாவட்டம் மனவார் என்ற இடத்தில் பிரதான சாலை வழியாக வேகமான வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த பஸ் மோதியது. இதில், மோட்டார் சைக்கிள் சாலையில் உரசிவாறே பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கியபோது, தீப்பொறி உருவாகி, மோட்டார் சைக்கிளும், பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த 3 பேரும், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்கால் மாவட்டத்தில் வேகமாக வந்த டிரக் முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.