கர்நாடகாவில் ஆளுநர் மாளிகைக்குள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணிவகுப்பாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காவிடில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் வழியில் மஜத எம்எல்ஏக்களும் இணைந்து ராஜ்பவனுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி, குமாரசாமி, ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா, சிவக்குமார் ஆகியோரும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
பெங்களூரில் ஆளுநர் மாளிகை முன்பு மஜத கட்சியினர் போராட்டம் நடத்தினர். பா.ஜ.கவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.