தாம்பரம்: மேற்கு தாம்பரம் கடப்பேரியில் கோயில் மதில்சுவரில் ஏறி விளையாடிய பள்ளி மாணவன்,மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.
இது குறித்து தாம்பரம் போலீஸ் தரப்பில் கூறியது: சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராஜா16 அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறைக்கு கடப்பேரி மௌலானா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து இருந்த ராஜா செவ்வாய்கிழமை அருகில் உள்ள அம்மன் கோயில் மதில் சுவரில் ஏறி விளையாடிக் கொண்டு இருந்தபோது, மதில் சுவருக்கு மேல் சென்ற உயர்மின்அழுத்தமின் கம்பியில் கைபட்டு, மின்சாரம் தாக்கியதில் தூக்கி ஏறியப்பட்டான்.
படுகாயமடைந்த ராஜாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தாம்பரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.