மும்பை பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 97.64 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 97.64 புள்ளிகள் சரிந்து 34,750.66-க்கு விற்பனையானது. அதேபோல் நிஃப்டி இன்டெக்ஸ் 38.25 புள்ளிகள் அல்லது 0.36 சதவீதம் குறைந்து 10,558.15 ஆக இருந்தது
கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா பதவி விலகிய பின்னர் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இதன் காரணமாகவே பங்குச் சந்தை சரிவை கண்டுள்ளதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.