இணையதள சேவை முடக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு: பிற்பகல் விசாரணை

தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதற்கு எதிராக சென்னை
இணையதள சேவை முடக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு: பிற்பகல் விசாரணை

தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவலை தடுக்கும் வகையில் இணையதள சேவையை முடக்க தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் நேற்று முதல் 27-ஆம் தேதி வரையில் இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இணைய சேவை முடக்கம் காரணமாக சமூக வலைத்தளங்களான வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவை செயல்படாது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழக அரசின் இணையதள சேவை முடக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணையதளத்தை முடக்குவது சர்வாதிகார செயல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

இந்த இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்  சூரிய பிரகாஷம் என்பவர் முறையீடு செய்துள்ளார். அவர் தனது மனுவில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் அவரது மனுவை அவசர வழக்காக இன்று பிற்கபகல் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com