தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று ஒரு வருடத்தில் ஒன்றுதான் நடந்துள்ளது: பொள்ளாச்சி ஜெயராமன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று ஒரு வருடத்தில் ஒன்றுதான் நடந்துள்ளது: பொள்ளாச்சி ஜெயராமன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த இரு நாள்களாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்த கேள்வி ஒன்று பதில் அளித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று ஒரு வருடத்தில் ஒன்றுதான் நடந்துள்ளது நடைமுறை என்றால் இப்படி அப்படிதான் இருக்கும் என்று கூறியுள்ளார். 

மேலும் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. துணை ராணுவத்தை அழைக்க வேண்டியதில்லை. துப்பாக்கிச்சூடு வேதனையைதான் தருகிறது ஒருநபர் விசாரணையில் முடிவு தெரியவரும் என்றும் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com