மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனால் இந்த ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக ஆட்சி பற்றி எதிர்மறை தகவல்கள் வேகமாக பரப்பப்படுகின்றன மத்தியில் பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்று தமிழிசை செளந்தரரான் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது:
தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை பாஜக அரசு இன்னும் கொண்டு வர உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு நிகழ்த்திய சாதனைகளை இந்த ஓராண்டில் எடுத்துச் சொல்வோம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.