சம்பா: ஜம்மு காஷ்மீரில் சம்பா கிராமத்தில் நிகழந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனா், ஏழு பேர் காயமடைந்துள்ளனா்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் அமைந்துள்ள சம்பா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனை மேற்பார்வையாளா் டாக்டர் ஹெச்.சிங், கூறுகையில், இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் "நாங்கள் இறந்தவர்களில் உடல்களை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் மற்றும் அவர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தார்களிடம் ஒப்படைக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சிலா் காயமடைந்துள்ளனா், அவா்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.