பெங்களூரு: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்து நியாம்கவுடா சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜாம்கண்டி தொகுயில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சித்து நியாம்கவுடா.
இவர் கோவாவில இருந்து கர்நாடகாவின் பாகல்கோட் நகருக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது துளசிகேரி அருகே வந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில், எம்.எல்.ஏ. சித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்து நியாம்கவுடா மரணத்தையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 77-ஆக குறைந்துள்ளது.