சென்னை: கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற இருந்த அரசு சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் (நவ.16 மற்றும் 17) நடைபெற இருந்த அரசு சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுகிறது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டப்படி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.