சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைய உள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழக கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள தாழ்வு பகுதியினால் சென்னை, அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவான்மியூர், மீனம்பாக்கம் தாம்பரம், பெருங்குடிஉள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.