புதுதில்லி: அதிமுக கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுள்ளது.
கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் மனுவுக்கு சசிகலா தரப்பு பதில் மனு செய்யப்பட்டுள்ளது.
அதில், அதிமுக கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.