அரசு யாருக்கும் அடி பணிந்து செயல்படவில்லை: அமைச்சர் சி.வி. சண்முகம்

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் அரசு யாருக்கும் அடி பணிந்து செயல்படவில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.
அரசு யாருக்கும் அடி பணிந்து செயல்படவில்லை: அமைச்சர் சி.வி. சண்முகம்


புதுதில்லி: நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் கைது விவகாரத்தில் அரசு யாருக்கும் அடி பணிந்து செயல்படவில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். 

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் கைது விவகாரம் குறித்து தில்லியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் கைது விவகாரத்தில் அரசு யாருக்கும் அடி பணிந்து செயல்படவில்லை என்றார். 

நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. அச்சப்படாமல் செயல்படும் தமிழக அரசுக்கு யாருடைய தயவும் எங்களுக்கு தேவை இல்லை என்றவர் தைரியமாக செயல்படுகிறது தமிழக அரசு என விளக்கம் அளித்தார். 

நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் மேல் நடவடிக்கை என்பது நீதிமன்றத்திற்கு உட்பட்டது என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com