எதிர்காலத்தில் அதிமுகவில் இருந்து ஒரு பெண் முதல்வராக வருவார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

எதிர்காலத்தில் அதிமுகவில் இருந்து ஒரு பெண் முதல்வராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அதிமுகவில் இருந்து ஒரு பெண் முதல்வராக வருவார்: அமைச்சர் செல்லூர் ராஜூ


மதுரை: எதிர்காலத்தில் அதிமுகவில் இருந்து ஒரு பெண் முதல்வராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக மகளிர் பிரிவு பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் என்று கூறினார். 

மேலும், எதிர்காலத்தில் அதிமுகவில் இருந்து ஒரு பெண் முதல்வராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

ஊழல் குற்றச்சாட்டுக்கு பதவி விலக வேண்டுமென்றால் நாட்டில் யாரும் ஆட்சி செய்ய முடியாது என்றும் ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.  

எதிர்காலத்தில் அதிமுகவில் இருந்து ஒரு பெண் முதல்வராக வருவார் எனக் கூறினீர்களே, அந்த பெண் யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெண் தொண்டர்களை  ஊக்குவிப்பதற்காகவே அவ்வாறு பேசியதாக பதிலளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com