திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள்தான் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் 
திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி


சென்னை: தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள்தான் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்வு சென்னையில் நடந்தது. இதில் மத்திய அரசின் சார்பில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம், வைஷாலிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். 

பின்னர் பேசிய அவர், தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் செய்துள்ளன என்றும் எல்லா மாநிலங்களிலும் பாஜக வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம். அந்த வளர்ச்சியை தமிழகத்தில் ஏன் கொண்டு வரக்கூடாது. தமிழகத்தில் ஊழல் அற்ற வளர்ச்சி தரும் கட்சி பாஜகதான் என்றார்.

மேலும், தேர்தல் வருவதால், வேறு வழியின்றி, மத்திய அரசு மீது கட்சிகள் ஊழல் புகார் சொல்கின்றன. எதிர்க்கட்சிகள், எந்த அமைப்பு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளை சொல்லும். சிபிஐ மீதும் சொல்வார்கள். அவர்களுக்கு சாதகமாக சொன்னால், நீதி வென்றது என்பார்கள். மாற்றி கூறினால், அதனை ஆட்டி படைப்பதாக குற்றஞ்சாட்டுவார்கள் என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com