திண்டுக்கல்: திமுகவில் மாற்றம் கொண்டு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் மு.க.ஸ்டானின் சகோதரருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்துகொண்டு பேசுகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியவர் கருணாநிதி. அவரிடம் இருந்து சுயமரியாதை, உழைப்பை கற்றுக்கொண்டேன்.
திருமங்கலம் தொகுதியில் நான் எவ்வாறு உழைத்தேன் என உங்களுக்கு தெரியும். திமுகவில் இருந்து கருணாநிதி என்னை வெளியேற்றவில்லை. திமுக தொண்டர்களுக்காக பேசிய என்னை சதிகாரர்களே வெளியேற்றினர் என தெரிவித்தார்.
மேலும், பதவிக்காகவே சிலர் ஸ்டாலினுடன் செல்கின்றனர் என்றும் பதவிக்காக ஆசைப்பட்டவர்களே ஸ்டாலின் முகாமில் உள்ளனர் என அழகிரி குற்றம்சாட்டினார்.
தேர்தல் வரும்போது எப்படி தாக்க வேண்டும் என செல்கிறேன்; காத்திருங்கள் என்றவர் திமுகவில் மாற்றம் கொண்டு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. தேர்தல் வரும் வரை காத்திருப்போம்; வரும்போது உழைப்பையும், திறமையையும் காட்டுவோம் என அழகிரி கூறினார்.
கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் ஆகியோர் கோழை என விமர்சனம் செய்தார்.