சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி கடந்த 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசினார்.
இந்நிலையில், வேல்முருகன் மீது சாதி இன மொழி ரீதியாக மோதலை தூண்டி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலவரத்தைத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கி மிரட்டும் தொனியில் பேசுதல் உள்பட 3 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.