சென்னை: தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞராக, மூத்த வழக்குரைஞரான ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞராக பொறுப்பு வகித்த எமிலியாஸ், கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞராக நியமனப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை சார்பில் ஆஜராக அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞர் ஏ.நடராஜனை நியமனம் செய்து தமிழக உத்தரவிட்டுள்ளது.