கோவை: கோவை அரசு கல்லூரியில் பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடிய முதுகலை எம்.ஏ வரலாறு முதலாம் ஆண்டு மாணவி மாலதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில், கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் முறையான அனுமதி பெறாமல் மாணவர்களை ஒன்று திரட்டி, கடந்த 28-ஆம் தேதி பகத்சிங் பிறந்தாளை மாணவ, மாணவிகளுடன் கொண்டாடியதால் மாணவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பகத்சிங் குறித்த உரையாடலின்போது கல்லூரியின் நிறை,குறைகளை மாணவி பேசியுள்ளார்.
பல தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாட அனுமதி கோருவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சி நடத்தியது குறித்து வரும் 22-ஆம் தேதி மாணவியிடம் விசாரணை நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.