சென்னை: இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர் என்று இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் வளர்ச்சி திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
வடக்கு பகுதியில் 28 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மாங்குளம் தொழில் பூங்காவாக மாறி வருகிறது. தமிழர்கள் வாழும் பகுதியில் 82 சதவீத நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர் என கூறினார்.