சென்னை: கடந்தாண்டை விட நடப்பாண்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கடந்தாண்டை விட நடப்பாண்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக அக்.25க்குள் 770 மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
மேலும், அண்டை மாநிலங்களில் இருந்து தொற்று நோய் பரவாமல் தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.