தஞ்சாவூர்: திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தனியார் விடுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி திமுக.
நெடுஞ்சாலை பணிக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதால் தான், உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிர்ஷ்டவசமாக முதல்வராக பொறுப்பேற்றவர் பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி உள்ளது என்றும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.