திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகளை ஒப்பந்த ஊழியர்கள் விற்றதில் முறைகேடு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இலவச தரிசன டிக்கெட் ஸ்கேன் ஆகவில்லை என கூறி ஒப்பந்த ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.