நாகர்கோவில்: சபரிமலை விவகாரத்துக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் கொண்டு வந்து மத்திய அரசே கோயிலை ஏற்று நடத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போலீஸ் பாதுகாப்புடன் பெண்களை சபரிமலை கோயிலுக்கு அழைத்துச் சென்று நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என குற்றம்சாட்டினார்.
சபரிமலை விவகாரத்துக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்றி ஐயப்பன் கோயிலை நிர்வாகத்தை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு, காவிரி, கூம்பு வடிவ ஒலி பெருக்கி உள்ளிட்ட பிரச்னைகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்திய கேரள அரசு, சபரிமலை தீர்ப்பை மட்டும் அமல்படுத்த முனைப்பு காட்டுவது ஏன் என்றும் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பினார்.