மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது: நல்லகண்ணு

சபரிமலை விவகாரத்தில் மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 
மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது: நல்லகண்ணு


திருத்துறைப்பூண்டி: சபரிமலை விவகாரத்தில் மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆர். நல்லகண்ணு குற்றம்சாட்டினார்.

திருத்துறைப்பூண்டியில் இன்று அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில், கேரளத்தில் மாநில அரசுக்கு எதிராக சபரிமலை விவகாரத்தில் மதவெறியை தூண்டிவிடும் வகையில் பாஜக செயல்படுகிறது. எனவே, சபரிமலை கோயிலுக்கு செல்பவா்களை தடுக்கக் கூடாது, அவர்களுக்குரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழக முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் மீது, ஊழல் குறித்து நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் ஜனநாயக முறையில் முதல்வர் உள்பட குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சா்கள் பதவி விலக வேண்டும். விசாரணையில் குற்றமில்லை என நிரூபிக்கப்பட்ட பின்னா் மீண்டும் பதவியேற்றுக் கொள்ள வேண்டும். 

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com