உத்தரகாண்ட்டில் மலைப்பகுதி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி; 21 பேர் படுகாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மோகன்ரி என்ற மலைப்பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர்
உத்தரகாண்ட்டில் மலைப்பகுதி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி; 21 பேர் படுகாயம்

அல்மோரா: உத்தரகாண்ட் மாநிலத்தில் மோகன்ரி என்ற மலைப்பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் மோகன்ரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில், பேருந்தில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். 21-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் சுமார் 30 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் மீட்புப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

பத்ரோக்ஜன் - பிகியாசன் சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்தில் 30 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com