உத்தரபிரதேசம் மீரட் பகுதியில் இன்று காலை 6.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தில்லியிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. மீரட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று மாலை தலைநகர் தில்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.