அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு


சென்னை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் தலா 100மி.மீ.மீ மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. செஞ்சியில் 7 மி.மீ மழையும், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, தாமரைப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் தலா 6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com